Feb 26, 2023

Life of Honey Bee

 தேனீக்களின் வாழ்க்கை


தேனீ குடும்பம் என்று நாங்கள் எவ்வளவுதான் கூறினாலும் அவை யாவர்? என்பதும் அவைகளின் வேலைகள் என்ன என்பதெல்லாம் நாம் பார்ப்போம்.
 3. ராணி தேனீ. (Queen Honey Bee/ Productive Bee)
2. ஆன் தேனீ. (Drone Honey Bee).
1. வேலைக்காரி தேனீ. (Worker Honey Bees / None Productive Bee).

ஒரு தேன் குடும்பத்தில் மேலே குறிப்பிட்ட மூன்று வகையான தேனீக்கள் மாத்திரமே வசிக்கும்.

உங்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கலாம் ஏன் 1,2,3 என்று போடுவதற்கு மாறாக 3,2,1 என்று குறிப்பிட்டுள்ளேன் என்று. காரணம் இருப்பதனால்தான் நான் அவ்வாறு வகைப்படுத்தியுள்ளேன். நீங்கள் வாசித்துக்கொண்டு செல்லும்போது உணர்வீர்கள் நான் ஏன் அவ்வாறு வகைப்படுத்தியுள்ளேன் என்பதனை.

3. ராணி தேனி (Queen Honey Bee/ Productive Bee)


முதலில் நாம் ராணி தேனீயைப் பற்றி பார்ப்போம். ராணி தேனீ என்பது ஒரு பெண் இனத்தை/வர்க்கத்தைச் சேர்ந்த ஒன்று. அது பிறப்பிலிருந்தே ராணியாக இருந்தாலும் சரி, அந்த ராணிக்கு ராணியாக தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொள்ள முடியாது.

இந்த ராணி தேனியானது இதனுடைய தாய் (இன்னொரு ராணி தேனியின்) கருக்கட்டப்பட்ட முட்டையிலிருந்து 16 நாட்களில் முழு ராணி தேனியாக முட்டையிலிருந்து வெளியே வரும்.

வேலைக்காரி தேனீக்களின் உதவியின்றி ஒரு ராணி தேனியாக பிறந்த அந்த ராணி தேனீ, ஒரு தேனீ குடும்பத்திற்கு ராணியாக முடியாது. விளக்கத்தை பின்னால் தெளிவுபடுத்தியுள்ளேன், சுவாரஷ்யத்துடன் வாசிக்கும் போது நீங்கள் விளங்கிக்கிகொள்வீர்கள் இஷா அல்லாஹ்.

ராணி தேனீ என்ன சாப்பிடும்?அதன் வேலைதான் என்ன?

ராணி தேனீயின் சாப்பாடு என்னவென்றால், வேலைக்கார தேனீக்களின் தலையிலிருந்து சுரக்கும் ஒருவகையான திரவம் (Royal Jelly /அரச கூல் )என்று அழைக்கப்படும். அதில்லாமல் வேலைக்காரி தேனீக்கள் இல்லாத பட்சத்தில் தனது உயிரைப்பாதுகாக்க மெல்லிய வகையான ஓரிரு இனிப்புகளை சாப்பிடும். அவ்வினுப்பானது தனக்கு அருகில் இருந்தால் மாத்திரமே சாப்பிடும், மாறாக வெளியில் சென்று பூக்களின் அமிர்தத்தை தேடிப்போய் சாப்பிடாது.

அந்த (Royal Jelly) எனப்படும் சாப்பாடானது கருவிலிருந்து இறக்கும் வரை ராணி தேனீக்கள் மாத்திரமே அதைச் சாப்பிடும்.

மற்ற தேனீக்கள் எதுவும் பிறந்த மூன்று நாட்களைத் தவிர அதன் பின்னர் எந்தவொரு தேனீயும் அதையும் சாப்பிடாது.

ராணி ததேனீ என்பது அதிகமான முட்டைகளை இடுவதற்கும், நீண்ட நாட்கள் திடகாத்தமாக வாழ்வதற்கும், தனது குடும்ப அங்கத்தவர்களை பெருக்கிக் கொள்வதற்கும் இந்த (Royal Jelly) எனும் சாப்பாட்டை சாப்பிட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் அதுவும் தாமாக சாப்பிடாது, வேலைக்காரி தேனீக்கள் ஊட்டிவிடவேண்டும்.

ராணி தேனீ மலர்களின் அமிர்தத்தைச் சேகரிக்குமா?

ராணி தேனீயின் வேலை என்னவென்றால் தனது குடும்பத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு அதிகமான முட்டைகளை இடும். அதன் முட்டைக் கருவிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்திற்கு 80 தொடக்கம் 90 வரையான முட்டைகள் இடும். ஒருநாளைக்கு சுமாராக 2000 முதல் 3000 இற்கும் மேலதிகமான முட்டைகளை இடுகின்றன.

அதிகமான முட்டைகளை கருக்கட்டுவதற்காக வேலைக்காரி தேனீக்கள் அதற்கேற்றவாறு ராணி தேனீக்கு (Royal Jelly) யை மட்டும் உணவாக ஊட்டும். ராணித் தேனீயின் உடம்பில் ஓரளவிற்கு மேலதிகமாக (Royal Jelly) உட்கொள்ளும் போது மாத்திரம் முட்டையாக இடும். 

ஓரளவிற்கென்றால் ராணி தேனீ உயிர்வாழ தேவையான, அதாவது ராணியின் பசிக்கேற்ப அதன் பசியைப்போக்க சாப்பிடும் (Royal Jelly) யின் அளவையும் விட அதிகமாக (Royal Jelly) யை சாப்பிடும் பட்சத்தில் ராணித் தேனீ அதனை முட்டையாக வெளிப்படுத்தும்.

2. ஆன் தேனீ (Drone/Male Honey Bee)


ஆன் தேனீ என்பது ஒரு ஆன் இனத்தை/வர்க்கத்தை சேர்ந்தது. அது பிறக்கும் போதே மற்றவர்களின் உதவியுடன் தான் பிறக்கும்.

ஆன் தேனீ என்பது இதனுடைய தாய் (இன்னொரு ராணி தேனியின்) கருக்கட்டப்படாத முழுமை நிலையடையாத முட்டையிலிருந்து பிறந்த மூன்றாம் நாளிற்குப் பிறகு (Bee Bread) என்கிற உணவை வைத்து தேன் அடையை மூடிவிடும் . பின்னர் மூடிய தேன் அடைக்குள் உள்ள  (Larvae/ நுண்புழு) வானது உணவை உண்டு 24 நாட்களில் முழு ஆன் தேனியாக வேலைக்காரி தேனீக்களின் உதவியுடன் மெழுகிலிருந்து வெளியே வரும்.

ஆன் தேனீ என்பது வேலைக்காரி தேனீக்களைப் போன்றில்லாமல் உருவில் பெரியதாகவும், பெரிய கண்களையும் கொண்டதாகவும், கொட்டுவதற்கு கொடுக்கு அற்றதாகவும், ராணி தேனீயின் பருமனையும் கொண்டிருக்கும்.

ஆன் தேனீயின் வேலை ராணி தேனீயுடன் இணைந்து இனச் சேர்க்கை செய்வது தான் என்றெல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்படித்தான் நானும் அறிந்திருந்தேன் இவைகளை கூர்ந்து கவனிக்காமல். ஆனால் உண்மைநிலை அதுவல்ல

ஆனால் நான் எனது தேனீ வளர்ப்பின் அனுபவத்தில் படித்த விடயம் என்னவென்றால் ஆன் தேனீ என்பது ராணி தேனீயுடன் இனச்சேர்க்கை செய்வது போலவே, தனது தேனீ குடும்பத்தை அதிக குளிரிலிருந்து பாதுகாக்கின்றது.

எந்தளவிற்கு என்றால்ராணி தேனீயுடன் ஒரு சில குறிப்பிடத்தக்க ஆன் தேனீக்களே இனச்சேர்க்கை செய்கின்றன. அதிலும் இனச்சேர்க்கை செய்து ஆண் தேனீயின் விந்து ராணி தேனீயின் கருவிற்கும்  சூலகத்திற்குமிடையே  மாட்டிக்கொண்டவுடனே, இனச்சேர்க்கை செய்த ஆன் தேனியானது கீழே விழுந்து சில நிமிடங்களிலேயே இறந்து விடும்.

காரணம் ஆன் தேனீயின் இனப்பெருக்க உறுப்பானது ராணி தேனீயின் சூலகத்தில் மாட்டிக்கொண்டு கிழிந்து விடுகிறது, அதாவது ஆன் தேனீயின் ஒரு பாகம் அதன் உடம்பிலிருந்து வேறாகி ராணி தேனீயின் உடம்பில் சிக்கிக்கொள்கிறது.

அதுமட்டுமல்லாமல் கடும் குளிர் காலங்களிலும், மழைக் காலங்களிலும் மீதமுள்ள (ராணியுடன் இனச்சேர்க்கை செய்யாத) ஆன் தேனீக்கள், கூட்டின் வாயிலிலும், தனது கூட்டிற்கு குளிர் உள்வாங்கப்படும் இடங்களிலும் நின்றுகொண்டு, ஒன்றோடொன்று பிணைந்து பிடித்துக்கொண்டு அனைத்து ஆன் தேனீக்களும் மூடிக்கொண்டிருக்கும் குளிர்  தமது கூட்டிற்குள் ஊடுருவிச் சென்று சிறிய குழந்தைகள் இறப்பதை தவிர்க்கின்றன.

எந்தளவிற்கென்றால் தமது உயிரைக் கொடுத்து தமது கூட்டினிலுள்ள ராணி,வேலைக்காரி தேனீக்கள் மற்றும் சிறிய குழந்தைகள் ஆகிய அனைவரையும் இருந்துவிடாமல், தான் இறந்தாலும் பரவாயில்லை தமது குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று காத்துக்கொண்டுண்டிருக்கும்.



ஆன் தேனீக்கள் ஒன்றோடு ஒன்று புனைந்துகொண்டு அதிக வெப்பத்தை வெளியாக்கும், அப்படி அதிக வெப்பத்தை வெளியாக்கும் போது உணவு உற்கொள்ளவில்லையெனில் சிறிது நேரத்திலேயே மற்ற ஆன் தேனீக்களைப் பற்றிப்பிடித்தவாறு உயிரை விட்டிருக்கும்.காரணம், உயிரிழந்த பிறகும் பற்றிப்பிடித்தவாறே குளிரை கூட்டிற்குள் ஊடுருவச் செய்யாமல் வழியை அடைத்தவாறே இந்திருக்கும்.

ஆன் தேனீக்களை பொறுத்தவரை ராணி தேனியைப் போன்றே ஆன் தேனீக்களும் வேலைக்காரி தேனீக்களால் உணவு ஊட்டப்படுகிறது. அவைகளிரண்டினது சாப்பாட்டிற்கு வித்தியாசம் உண்டு. ராணி தேனீ சாப்பிடும் (Royal Jelly) யை ஆன் தேனீக்களுக்கு வழங்காது, மாறாக மகரந்தம் மற்றும் தேன் இரண்டையும் கலந்து ஒரு வகையான கலப்பு சாப்பாட்டை க் கொடுக்கும் அதற்கு (Bee Bread) /தேன் ரொட்டி எனப்படும்.

ஆன் தேனீக்கு கடித்து எடுக்கக் கூடிய கடினமான உதடுகளோ,வேலைக்காரி தேனீக்களைப் போன்ற நீண்ட நாக்கோ, கால்களில் மகரந்தப்பையோ, கொட்டுவதற்கு கொடுக்கோ இல்லை. மாறாக ஆன் தேனீக்களுக்கு பலமான சிறகுகளும், பெரிய கண்களும் இருக்கும்.

எனவே ஆன் தேனீக்கள் தமது முட்டையிலுருந்து பெண் தேனீக்களைப் போல் தாமாக தேன் அடை (தேன் மெழுகு) ஐ கடித்துக்கொண்டு வெளியே வரமுடியாது, வேலைக்காரி தேனீக்களின் உதவியுடன் தான் முட்டையிலிருந்து வெளியே வரும் ஆன் தேனீக்கள்.

ஆன் தேனீக்கள் உருவத்தில் பெரியதாக வண்டுகளைப்போல் இருப்பதால் தமது கூட்டிற்கு ஆபத்துக்கள் வரும்பட்சத்தில், அவை எதிரிகளை தாக்குவதற்கு முற்படும். ஆனால் அவைகளுக்கு கொட்டுவதற்கு கொடுக்கு இல்லாதகாரணத்தால் அவை தம் எதிரிகளின் உடம்பில் வேகமாக கற்களை எரிவதை போல் வந்து விழும் பட்சத்தில், எதிரிகள் பயந்து தாக்குவதை நிறுத்தி விட்டு அவ்விடத்தை விட்டு விரண்டோடிவிடும்.

ஆறறிவுள்ள மனிதனர்களாகிய எங்களுக்கு தெரியும் ஆன் தேனீக்கள் கொட்டுவதில்லை என்பது. எனவே ஆன் தேனீக்களை வெறுங்கையால் அனைவருக்கும் பிடிக்க முடியும்.  சிலர் என்னிடம் கேட்டதற்கான பதில் (நீங்கள் எப்படி கொட்டக்கூடிய வேலைக்காரி தேனீக்களையும் வெறுங்கையால், முகக்கவசம் ஏதுமின்றி கையாளுகிறீர்கள் என்று).

அதற்கான பதில் ( நீங்களும் தேனீக்களை வளர்க்கும் சந்தர்ப்பத்தில், அவை சில கொட்டும், சில காட்டுவதில்லை, அதிலும் தேனீக்களை வளர்க்கும் போது அவைகளை தமது செல்லப்பிராணிகளைப்  போல் வளர்க்க வேண்டும் அப்பொழுதுதான் அவைகளுக்கும் உணர்வுகள் இருப்பதை அறிவீர்கள், அவைகளுக்கு கஷ்டங்கள், வலிகள் போன்றவற்றை கொடுக்காமல் மெதுவாக நாம் கையாளும் போது அவை எம்மை கொட்டுவதில்லை மாறாக தமது செல்லப்பிராணிகளாகவே மாறி எங்களுடன் நடந்துகொள்ளும்).

என்னுடைய மகன் அஹமட்  அயானும் என்னைப்போலவே எல்லாத் தேனீக்களை வெறுங்கைகளால் பிடித்து விளையாடும் காட்ச்சியை பார்க்க இந்த லிங்க் ஐ கிளிக் செய்து பாருங்கள்.

My Son Enjoying with Honey Bees 1 , My Son Enjoying with Ho    ney Bees 2

1. வேலைக்காரி தேனீ. (Worker Honey Bees / None Productive Bee).

வேலைக்காரி தேனீக்கள் பெண் இனத்தைச்சேர்ந்த கருக்கட்டிய முட்டையிலிருந்து பிறக்கும். 

ஆனால் அது பிறந்த மூன்றாம் நாளிற்குப் பிறகு மற்ற வேலைக்காரி தேனீக்கள் ஆன் தேனீக்களுக்கு போலவே (Bee Bread) என்கிற உணவை வைத்து தேன் அடையை மூடிவிடும் .பின்னர் மூடிய தேன் அடைக்குள் உள்ள  (Larvae/ நுண்புழு) வானது உணவை உண்டு (21) நாட்களில் தேன் மெழுகிலிருந்து  தாமாகவே தேன் அடையை கடித்து துளையிட்டு வெளியே வரும்.

பிறந்த அடுத்த கணமே அதனுடைய பெயரிற்கு பொருத்தமான (வேலைக்காரி) என்பதனை உணர்த்தும் வகையில் அதனுடைய வேலையை ஆரம்பித்து விடும்.

பிறந்து சில வினாடிகளிலேயே வேலையை செய்ய ஆரம்பிக்கும் ஒரே உயிர் தேனீ என நினைக்கின்றேன்.

தேனீக்களின் வாழ்க்கையை நாம் 4 கட்டங்களாக பார்ப்போம்.

கட்டம்-01

இத்தேனீக்களின் முதல் வேலையாக, தாம் வெளியே வந்த அந்த புழு அறையை சுத்தம் செய்வது.

இவ்வேலையானது வேலைக்காரி தேனீக்கள் கிட்டத்தட்ட 3 நாட்களுக்கு அறைகளை சுத்தம் செய்யும் வேலையை செய்யும். சுத்தம் செய்த பின்னர் ராணி தேனீ அவ்வறையில் மீண்டும் புதிதாக முட்டையிடும். எனவே இதை முதல் வேலையாகவும் முதல் கட்டமாகவும் இருக்கும். ஆனால் இம்முதல் கட்டத்தில் இத்தேனீக்களுக்கு பறக்க முடியாது.

கட்டம்-02
இரண்டாவது கட்டமாக அவைகளின் ஹோர்மோன் சுரப்பியினால் தானாகவே காட்டப்படும் அடுத்த வேலையை ஆரம்பிக்கும். அடுத்த வேலையானது சிறிய புழுக்கள் (lARVAE) க்கு உணவு வழங்கும் வேலைகளை செய்ய ஆரம்பிக்கும். இவ்வுணவு வழங்கும் வேலையானது கிட்டத்தட்ட 7நாட்கள் வரை செய்யும்.
கட்டம்-03

7 நாட்களுக்குப் பிறகு தாம் ஓரளவு வளர்ந்து பெரிய தேனீக்களாக மாறி பெரிய வேலைகளான வீடு கட்டுதல், (தேன் ஆடைகளை கட்டுதல்)தம் வீட்டைப் பாதுகாத்தல் (தமது வீட்டின் வாயிலில் இருந்தபடியே எதிரிகள் உள்ளே வராமல் பாதுகாத்தல்)மற்றும் வீட்டிலுள்ள உணவியப்பொருட்களை (வெளியிலிருந்து மற்ற தேனீக்கள் கொண்டு வரும் உணவுகளை)சேகரித்து வைத்தால் போன்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கும்.

இதுவும் இன்னுமொரு 7நாட்களுக்கு நடக்கும். கிட்டத்தட்ட மூன்றாவது கட்டமும் 7 நாட்கள் செய்கின்றன.

கட்டம்-04

இந்த கட்டமானது தேனீக்களுக்கு ஆபத்தான வேலையாகும்.ஏனென்றால் முதன் முதலாக தமது வீட்டை விட்டு வெளியே பறந்து சென்று அவைகளின் உணவுகளான பூத்தேன்,மகரந்தம், நீர், உப்பு போன்றவற்றை சேகரிக்கச் செல்லும்.

இந்த வேலைகளானது கிட்டத்தட்ட 40,41 வது நாட்களிலிருந்து 50 நாட்களுக்கு செய்யும்

பின்னர் 50 லிருந்து 55 அல்லது 60 நாட்களுக்குள் தமது மரணத்தை சந்தித்து அவைகளின் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.



ஏன் இந்த கட்டம் -04 ஆபத்தான வேலை என நினைக்கலாம். ஏனென்றால் உணவு சேகரிக்கச் செல்லும் போது, தேனீக்களின் எதிரிகளான ஓணான், பள்ளி, தவளை,குருவிகள், வண்டுகள், குளவிகள், தும்பிகள் போன்ற உயிரினங்கள் இத்தேனீக்களை தமது இறையாக ஆக்கிக்கொள்ளும்.

தமது உயிரை பணையம் வைத்து தமது இனத்தினை பெருக்க வேண்டும் என நினனைத்து தான் செயல்படுகிறது இதேனீக்கள்.

இறுதியாக இதேனீக்கள் இறந்த பின்னர் அவைகளை வெளியே எடுத்துச் சென்று மிக தொலைவில் இறந்த உடலை வீசிவிட்டு மீண்டும் தமது கூட்டிற்கு திரும்பும் அந்த வேலைக்குரிய தேனீ.

இவ்வளவுதானா?

என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் அவ்வளுவு அல்ல.

இந்த 04 கட்டங்களிலும் எல்லாத் தேனீக்களும் ஒரே வேலையை செய்யாது, ஒவ்வொரு வேலைகளையும் செய்வதற்கு சில தேனீக்கள், அதிலும் எந்த தேனீ எந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என அவை பிறந்த முட்டையின் (அந்த ராணியின் ஹோர்மோன்) ஐ பொறுத்தவரையில் அது மாறுபடும்,

உதாரணமாக ஒரு தேனீக்கு நோய் ஏற்பட்டுவிட்டால், அந்த நோயை குணமாக்கவோ , அதற்கான மாற்று மருந்துகளை செய்யவோ அத்தேணீ அதன் பரம்பரையில் அந்த வேலைகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு ராணியின் முட்டையிலிருந்து வந்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் மாத்திரமே அந்நோயிலிருந்து அவைகள் அனைத்தும் அந்நோயிலிருந்து பாதுகாப்பு பெரும்.

அதனால்தான் தேனீக்களை வளர்ப்பதற்காக நீங்கள் வாங்கும்  அத்தேனீயின் (GENETICS} ஐ பார்த்து வாங்க வேண்டும் என நாம் அறிவிக்கின்றோம்..

தேனீக்களை வாங்க தொடர்ப்புகொள்ளவும் MOHAMED AZHAR +94787773344 Matale, Ukuwelalllla.

Feb 17, 2023

Honey Bees in Tamil

 

 Welcome to UniverCellSoft Honey Bee Section.

 தேனீக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உங்களை வரவேற்கின்றேன்.



 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ...

முதலில் நான் என்னைப்பற்றிய தகவல். மற்றும் நான் எப்படி தேனீக்களை வளர்க்க ஆரம்பித்தேன் என்ற விடயத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

எனது பெயர் முஹம்மது அஸ்ஹர் (அன்சார் கைரூன் சகியா) ஆகியோரின் மூன்றாம் புதல்வன். நான் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லீம் குடிமகன்.

2016 ஆண்டிலிருந்து நீண்ட காலமாக எனக்கு தேனீ வளர்ப்பதற்கு ஆசை மற்றும் ஆவலோடு தேனீப் பெட்டி விற்பனை செய்பவர்களை தேடி அலைந்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது என்னுடைய இந்து மற்றும் பௌத்த நண்பர்கள் மூலமாக ஒரு முக்கிய விடயத்தை செவியேற்றேன்.

அவ்விடயமானது என்னை குதூகலத்தில் ஆழ்த்தியது. மாத்தளை விவசாயத் திணைக்களத்தில் தேனீக்களுடன் தேனீப்பெட்டியும், எவ்வாறு அத கையாழ்வது என்ற பயிற்சியும் இலங்கை அரசு இலவசமாக வழங்குகிறது. என்னுடைய நண்பரின் மகன் அப்படிப் பயிற்சியெடுத்து இப்பொழுது  தேனீக்களை வளர்க்கின்றான் என்று அவர்கள் கூறியதுதான். 

உடனே நானும் மாத்தளை விவசாயத் திணைக்களத்தின் தொலைப்பேசி (0662243451) இலக்கத்திற்கு அழைத்து விபரத்தைக் கூறினேன். அதற்கவர்கள், இப்பொழுது எமது மாத்தளை விவசாயத் திணைக்களத்தில் தேனீக்களுடன் தேனீப்பெட்டி இல்லை என்று கூற நானும் கவலையுடன் அழைப்பை துண்டித்தேன் நன்றி கூறி.

இருப்பினும் விடாமுயற்சியில் ஈடுபட்டு மீண்டும் சில தினங்களில் மாத்தளை விவசாயத் திணைக்களத்துடன் பேசினேன். அப்பொழுது ஒரு பெண் ஊழியர் என்னைத் தொடர்புகொண்டு நீங்கள் அடுத்த மாதம் எங்களை அழைத்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள், அப்பொழுது எங்களிடம் உங்களுக்கு தேவையான அத்தேனீ கிடைக்க வாய்ப்புண்டு என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

நானும் சரி என்று சொல்லிவிட்டு அடுத்த மாதமும் அழைத்தேன். ஆனால் எந்த பிரயோசனமும் கிடைக்கவில்லை, தொடர்ந்து கிட்டத்தட்ட 2016 முதல் 2019 வரை முயற்சி செய்துகொண்டே இருந்தேன். ஆனால் எனக்கு என்னுடைய பெயரைக் கேட்டு விட்டு கூறினார், உங்களுக்கு வேண்டுமென்றால் ரூ. 1500 கொடுத்து தேனீப்பெட்டி மாத்திரம் வாங்க முடியும் எங்களிடம் தேனீக்கள் இல்லை என்ற அதே பதில் மீண்டும்.

ஆனால் எனக்கு அறிய வந்த விடயம் என்னுடைய வாடிக்கையாளரிடம் இருந்து. போன மாதம், அதற்கு முந்தைய மாதம் எல்லாம் மாத்தளை விவசாயத் திணைக்களத்தில் தேனீக்களுடன் தேனீப்பெட்டி கொடுத்தார்கள் ஆனால் தேனீப்பெட்டிக்கு மாத்திரம் ஒரு சிறிய அறவீடு செய்தார்கள் என்று.

நான் மீண்டும் முயற்சி செய்தேன் ஆனால் மீண்டும் எனக்கு ஏமாற்றமே.

அந்த ஏமாற்றத்திற்குப் பிறகு... நான் எனக்கு பல மொழிகள் பேச தெரிந்தவனாக இருந்த காரணத்தால், கனடா நாட்டு தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சில தேனீ வளர்ப்பாளர்களை இணையத்தில் தொடர்ப்புக்கொண்டு அவர்களிடம் இத்தேனீக்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன்.

அதுபோக இஸ்லாமிய மார்க்கமான எமது மார்க்க குர்-ஆனிலும் தேனீக்களைப்பற்றி இறைவன் கூறியிருப்பதை நான் அறிவேன். எனினும் எனது ஆசை இன்னும் அதிகமானது எப்படியாவது தேனீக்களைப்பற்றி முழுமையாக கற்றுக்கொள்ளவேண்டும் என்று.

ஆனால் நான் கற்றவைகளை செயல் மூலம் அனுபவத்தில் அடைய என்னிடம் தேனீக்கள் இல்லை, அதற்கு முதலாவதாக இணையத்தில் தேடி ஒருவரிடம் ரூ.9500 செலவில் ஒரு தேன் பெட்டியை வாங்கினேன்.

எந்தவித முன்னனுபவமும் இல்லாமல் வளர்க்க ஆரம்பித்தேன். வளர்க்க ஆரம்பித்து 15-20 நாட்களில் அந்தத் தேனீக்கள் எல்லாம் ராணித் தேனீயைக் கூட்டிக்கொண்டு பெட்டியை விட்டு பறந்து விட்டன.

கவலையுடன் இருந்த நான் மீண்டும் செலவழித்து தேனீக்களை வாங்கிவந்தேன். ஒரு சில தினங்களில் அவையும் பறந்துவிட்டன. கவலைக்கு மேல் கவலை, கையில் காசுமில்லை மீண்டும் தேனீக்கள் வாங்குவதற்கு.

ஆனால் எனக்கு உறுதுணையாக இருந்த இறைவன் மற்றும் எனது மனைவி மாத்திரமே, அப்பொழுது என் மனைவி சப்fரினா கூறினால் என்னுடைய கவலையைப்போக்க, நீங்கள் யாருக்கும் அநியாயம் நினைப்பவரில்லை, ஹராத்தை தவிர்த்து வாழ்கின்றவர் எனவே ஏதாவது ஒரு நலவு இருக்கும் அது தான் அவையெல்லாம் பறந்துவிட்டன என்று, அப்பொழுது அவள் எனக்கு கூறிய ஆறுதல் என்னை மீண்டும் முயற்சி செய்ய வைத்தது.

இனி நான் தேனீக்களை வாங்கப்போவதில்லை ஆனால் எங்கிருந்தாவது தேனீக்களைப் பிடித்துவந்து வளர்ப்பேன் என்றேன் என் அன்பு மனைவியிடம். அதற்கு எனது மனைவியும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் என்றால்.

சில மாதங்களுக்கு பிறகு தேனீக்களை பிடித்து வந்து வளர்க்க தொடங்கினேன் இறைவனின் உதவியுடன். அன்றிலிருந்து இன்று வரை நான் இறைவனின்  உதவியுடன் மாத்திரம் எனது தேனீ வளர்ப்பை சிறப்பாக நடாத்தி வருகின்றேன். வேறெவரிடமும் உதவிகள் கேட்காமல் முக்கியமாக இலங்கை விவசாயத் திணைக்களத்தின் உதவிகள் இல்லாமல்.

இன்று நாடளாவிய ரீதியில் என்னிடம் தேனீப்பெட்டிகளை வாங்குவதற்கு வருகின்ற அனைத்து மத மக்களுக்கும் நான் மும்மொழியிலும், அனுபவப்பட்ட அனைத்து விடயங்களையும் அவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து  தேனீப்பெட்டிகளை விற்கின்றேன்.

(நான் அனுபத்தில் அறிந்து கற்றுக்கொண்ட விடயங்களை இலங்கை விவசாயத் திணைக்களம் முயன்றுகொண்டிருக்கையில், நான் கூட அறியாத விடயங்களை நான் அறிவேன், இன்னும் தேனீக்களுக்கு வரும் ஒருவித உண்ணிகளை போக்க முழு உலக தேனீக்கள் சங்கமும் முயன்றுகொண்டிருக்கையில், நான் என்னுடைய சில அனுபவ சிகிசிச்சைகள் மூலம் நீக்கியுள்ளேன், அதுமட்டுமல்லாமல் எனது Youtube Chenalலில் உலகளாவிய ரீதியில் பார்த்து பலன் பெறுவதற்காக காணொளியாக பதிவேற்றம் செய்துள்ளேன்.)

வீடியோவை பார்க்கவும்

இவையனைத்தையும் கூறிய பிரதான காரணம், நீங்களும் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற ஒரு குறிக்கோளோடு எந்த விடயத்தையும் ஆரம்பியுங்கள்.

நீங்கள் இலங்கையை சேர்ந்தவரா? நீங்களும் தேனீ வளர்க்க ஆர்வமுள்ளவரா? எங்கே தேனீக்களை வாங்குவது? எப்படி வளர்ப்பது? என்று ஆவலுடன் இருக்கிறீர்களா?

கவலை வேண்டாம் , எங்களை அணுகுங்கள்.

Mohamed Azhar

0787773344



அல்ஹம்துலில்லாஹ்...


Next Page தேனீக்கள்